Saturday, February 23, 2008

காசு வாங்காத கான்வென்ட்... அசத்தல் அரசுப்பள்ளி!

சகிப்புத் தன்மையும், அர்ப்பணிப்பு குணமும் இருந் தால் அரசுப் பள்ளியைக் கூட கான்வென்ட் ரேஞ்சுக்கு மாற்றிவிட முடியும் என்று நிரூபித்திருக் கிறார் ஒரு தலைமை ஆசிரியர்.



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்குப் பக்கத்தில் இருக்கிறது மாங்குடி கிராமம். சரியான போக்குவரத்து வசதிகூட இல்லாத இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இருக்கிறது. மாங்குடியை சுற்றியிருக்கிற பத்து கிராமங்களின் ஏழை மற்றும் நடுத் தரக் குடும்பத்துக் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்விக்கு இதுதான் ஒரே பள்ளி. வழக்கமான அரசுப் பள்ளிகள் போலவே இயங்கி வந்த இங்கே மூன்றாண்டுகளுக்கு முன் ஜோதிமணி என்பவர் தலைமை ஆசிரியராக வந்த பிறகு, மளமளவென மாற்றங்கள்!





மூன்றே ஆண்டுகளில் 'யூனிஃபார்மில் அசத்தும் மாணவ-மாணவிகள், வகுப்பறை தவறாமல் பெஞ்ச்- டெஸ்குகள், ஒவ்வொரு வகுப்பறைக்கும் கேபிள் இணைப்புடன் கூடிய டி.வி-க்கள், வகுப்பறைக் குள்ளேயே பைப்பைத் திருகினால் குடிநீர், கம்ப் யூட்டர் கல்வி, தையல் பயிற்சி, கைத்தொழில் பயிற்சிகள்' என பள்ளியை பிரமாதப்படுத்தியிருக்கிறார் ஜோதிமணி.

இதனால் கவரப்பட்ட கல்வித்துறை உயரதிகாரிகள்... புதுகை,தஞ்சை, சிவகங்கை மாவட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன்கூடிய விடுப்பு கொடுத்து, இந்தப் பள்ளி நடக்கும் விதத்தைப் பார்த்துவிட்டு வரும்படி அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆண்டுக்கான மாவட்டத்தின் சிறந்த பள்ளியாகவும் இப்பள்ளி தேர்வாகியிருக்கிறது.

''எப்படி இப்படி சாதிக்க முடிந்தது?'' என்று ஜோதிமணியிடம் கேட்டோம்.

''இந்தப் பள்ளியில 260 ஸ்டூடன்ட்ஸ் படிக்கிறாங்க. நான் வந்த புதுசில்
மாணவர்கள் மட்டுமில்லை, சில ஆசிரியர்கள்கூட பள்ளிக்கு சரியா வர்றதில்லை. பள்ளிக் கூடத்தைச் சுத்தி ஒரே காடா இருந்துச்சு. இருந்தாலும், நமக்கு குடுத்திருக்கிற வேலையைசரியா செஞ்சாஎல்லாத் தையும் மாத்தி டலாம்னு நெனைச்சேன். அதுக்கு ஊர் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தாங்க.

நான் இங்கே வந்த அடுத்த மாசம் தீபாவளி... அப்ப பேரன்ட்ஸ் மீட்டிங் போட்டு 'இந்த வருஷம் உங்க பிள்ளைகளுக்கு எடுக்கிற டிரெஸ்ஸை யூனிஃபார்மாவே எடுத்துடுங்க'னு சொன்னேன். இதில் சில குழந்தைகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாம். ஆனா, பெற்றோர் அப்படியே செஞ்சாங்க. அதுதான் எனக்குக் கிடைத்த முதல் வெற்றி. அதுக்கப்புறம் காம்பவுண்ட் சுவர், கம்ப்யூட் டர் வசதின்னு நீங்க இப்போ பார்க்கிறதுல முக்கால் வாசியை ஆறே மாசத்துக்குள் கொண்டு வந்துட்டோம்'' என்று சொன்னவர்,

''ஐந்தாம் வகுப்பு மாணவன் ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி படிக்கிற அளவுக்கு இருந்தாலே போதும் என்கிறது கல்வித்துறை சட்டதிட்டம். நான் இங்கு வந்தபோது, எட்டாம் வகுப்பு படிக்கிறவன் தமிழைப் படிக்கவே தடுமாறினான். ஆனா, இப்ப ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு எட்டாம் வகுப்பு மாணவனுக்கான கல்வி அறிவைக் கற்றுக் கொடுத்திருக்கிறோம். மாணவிகள் ஒரு வாரமானாலும்கூட ஜடையை அவிழ்த்து கட்டாம வந்துட்டிருந் தாங்க. அதை மாத்துறதுக்காக ஒரு நாள் ஒத்தை ஜடையும், மறுநாள் ரெட்டை ஜடை யும் போட்டுட்டு வரணும்னு கண்டிஷன் போட்டோம். அதுலருந்து தினசரி தலைக்கு எண்ணெய் வைத்து சுத்தமா வாரிக் கொண்டு வர ஆரம்பிச்சுட்டாங்க.

மாணவர்களுக் கிடையே கடிதம் எழுதும் திறனை வளர்க்கணும் கிறதுக்காக ஒவ்வொரு வகுப்பறையிலும் தபால் பெட்டிகளை வச்சிருக்கோம். ஒவ்வொரு வகுப் பிலும் மாணவர் களுக்குள்ளேயே ஒரு போஸ்ட்மேனும் போஸ்ட் மாஸ்டரும் இருக்கிறார்கள். மாணவ போஸ்ட் மாஸ்டரிடம் 50 காசு குடுத்தால் அவர் 'கார்ட் போர்டு' அட்டையிலான ஐந்து போஸ்ட் கார்டுகளைத் தருவார். ஸ்டூடன்ட்ஸ் அதை வாங்கி பக்கத்து வகுப்பிலிருக்கும் தனது தோழிக்கோ தோழனுக்கோ கடிதம் எழுதி தபால் பெட்டியில் போட்டுவிடுவார்கள். அந்தத் தபால்களை எடுத்து உரிய மாணவரிடம் சேர்ப்பது 'போஸ்ட்மேனின்' வேலை.

மாணவர்களுக்குத் தொழிற்கல்வியைக் கத்துக் கொடுக்கிறதுக்காக வருஷத்துக்கு 5,500 ரூபாய் கொடுக்குது அரசாங்கம். அதுல சாம்பிராணி, ஊதுபத்தி செய்யுறதை சொல்லிக் குடுத்தாப் போதும்னு சொல்றாங்க. நாங்க கூடுதலாப் பணத்தைப் போட்டு ரெண்டு தையல் மெஷினை வாங்கிப் போட்டோம். தையல் பயிற்சி குடுக்குறதுக்காக ஒரு டீச்சரையும் நியமித்தோம். இப்ப எங்க பசங்கள்ல பலர் தங்களுடைய டிரெஸ்களை மட்டுமில்லாம அடுத்தவங்களுக்கும் டிரெஸ் தச்சுக் குடுக்கிற அளவு தேர்ந்துட்டாங்க. கிராமத்தினரும் சக ஆசிரியர்களும் ஒத்துழைப்பு கொடுக்காட்டி என்னால இதையெல்லாம் சாதிச்சுருக்க முடியாது'' என்றார் அடக்கத்துடன்.

நகர்ப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலரே கம்ப்யூட்டர் பற்றிய நேரடி அறிமுகம் இல்லாமலிருக்க, இங்கே ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்கூட கம்ப்யூட்டரை இயக்கி 'பிரின்ட்-அவுட்' எடுக்குமளவுக்குப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். மாணவர்களிடம் வாசிப்புத் திறனை வளர்ப்பதற்காக ஒரு ஆங்கில தினசரி உள்பட நான்கு தினசரிகளை வாங்கிப் போடுகிறார்கள். இதில் ஒன்றை மாணவர்கள் செலவிலேயே வாங்கிப் போடுகிறார்கள். இவற்றில் வெளிவரும் செய்திகளை பிரேயரில் மாணவர்களே வாசித்தும் காட்டுகிறார்கள். யாராவது ஒரு ஆசிரியர் லீவிலிருந்தால் அவர் நடத்த வேண்டிய பாடம் வகுப்பறையில் சி.டி. பிளேயர் மூலம் ஒளிபரப்பாகிவிடும்!

தலைமை ஆசிரியர் ஜோதிமணியைப் பற்றி சக ஆசிரியரான மேகநாதன் நம்மிடம், ''இந்தப் பள்ளியில் ஜோதிமணி சாருக்குக் கீழே நாங்களும் பணிபுரிவதைப் பெருமையா நினைக்கிறோம்'' என் கிறார் நெகிழ்வுடன்.

இப்பள்ளியின் முன்னாள் மாணவரான சக்திவேல், ''நாங்க படிக்கிறப்பெல்லாம் பதினோரு மணிக்குத்தான் வாத்தியாரே வருவார். இன்டர்வெலுக்கு வெளியில போனா திரும்ப வரவே மாட்டோம். 'ஏன்வரலை?'னு கேக்குறதுக்குக்கூட ஆள் இருக்காது. ப்ரௌஸிங் சென்டர் வச்சுருக்கிற எனக்கே கம்ப்யூட்டரை முழுமையாக உபயோகிக்கத் தெரியாது. ஆனா, இந்தப் பசங்க சர்வ சாதாரணமா கம்ப்யூட்டர்ல புகுந்து விளையாடுறதைப் பார்த்தா, நாங்க படிச்சப்பவே இந்த மாற்றங்கள் வரலியேனு ஏக்கமா இருக்குங்க'' என்கிறார்.

மாங்குடி ஊராட்சிமன்றத் தலைவரான பாலாமணி ரெங்கசாமி, ''எங்க ஊரு பிள்ளைகள்லாம் பணம் வாங்காத கான்வென்ட்ல படிச்சுக்கிட்டிருக்காங்க! இந்தப் பள்ளியோட வளர்ச்சிக்காக எதைக் கேட்டாலும் செஞ்சு குடுத்துட்டுத்தான் மறு வேலை. கூடிய சீக்கிரமே இங்கே இருக்கிற லைப்ரரி ஹாலுக்கு ஏ.ஸி. வசதி பண்ணிக் குடுக்கப்போறோம்'' என்றார் பெருமிதத்துடன்.

அர்ப்பணிப்பு உணர்வு என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுகிறோம். அரசுப் பணிகளில் அது அபூர்வமாகிவிட்ட இந்த நாளில், வாழும் உதாரணமாக விளங்கும் ஜோதிமணி போன்ற விதிவிலக்குகளுக்கு அரசாங்கம் நிறையவே ஊக்கமும் அங்கீகாரமும் தரவேண்டும். அதுதான் அர்ப்பணிப்புக்குத் தருகிற அற்புதமான மரியாதையாக இருக்கும்!
நன்றி :- ஜூனியர் விகடன். Feb 24-28, 2008

Wednesday, February 06, 2008

பிலிபைன்சில் - குண்டு பல்ப்புக்கு குண்டு

ஆஸ்திரேலியா, கனடாவை தொடர்ந்து தற்பொழுது பிலிபைன்சும் 2010-ம் ஆண்டுக்குள் அனைத்து குண்டு பல்புகளையும் (incandescent bulb) பயன்படுத்துவதை கைவிடுகின்றது.








இதற்கு மாற்றாக குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கக்கூடிய சுருள் பல்புகளை பயன்பாட்டில் கொண்டுவர இருப்பதாக பிலிபைன்சின் அதிபர் கோலோரி (Gloria Macapagal Arroyo) தெறிவித்தார். இவ்வாறான நடவடிக்கையை ஆசியாவில் முதல் நாடக பிலிபைன்ஸ் நடைமுறை படுத்தவிருக்கின்றது.








இந்த மாற்று நடவடிக்கை மூலம் மின்சாரதேவையை பெரும்மளவு குறைக்க இயலும் எனவும், மின்சார உற்பத்தியை குறைப்பதன் மூலம் கரிஅமில வாயுக்கள் (Greenhouse gas) வெளியிடுவதை குறைக்க இயலும் எனவும் ஆசிய வளர்ச்சி வங்கியின் தொழில் நுட்ப ஆலோசகர் தெரிவித்தார்.


சுருள் பல்புகள், குண்டு பல்புகளை காட்டிலும் பன் மடங்கு விலை அதிகம். இதனை சாமானியவர்களுக்கு சாமானியம் ஆக்கும் வகையில் $30 மில்லின் அளவிளான பொருளாதார உதவி திட்டதையும் கொண்டு வர இருப்பதாக மனிலாவை சேர்ந்த வங்கி மேலாளர் தெறிவித்தார்.


அதேல்லாம் சரி இந்த சுருள் பல்ப்ப உபயேகிப்பதால் அப்படி என்ன லாபம்னு கேக்கறிங்கள?



100 வாட் எரிதிறன் கொண்ட குண்டுபல்பின் வெளிசத்தை 25 வார் எரிதிறன் கொண்ட சுருள் பல்பின் மூலம் வெளிபடுத்த இயலும். சுருள் பல்பின் ஆயுட்காலம் குண்டு பல்பின் ஆயுட்காலத்தை விட 6 முதல் 10 மடங்கு அதிகம். இதன் மூலம் பொருமளவிளான எரிபொருளையும் எழை மக்களுக்கு மின்சார மானியம்மாக வழங்கும் பணத்தையும் அரசங்கத்தால் மிச்சப்படுத்த முடியும்.


அதேல்லாம் சரி இவ்வளவு எழுதிறியே நீ என்ன பல்பு உபயோகபடுத்துறனு? கேட்கிற்ங்கதானே....


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக என்னுடைய வீட்டில் வெறும் சுருள் பல்புகள் மட்டுமே. என் வீட்டில் 16 சுருள் பல்புகள் உபயோகத்தில் உள்ளன. இதன் மூலம் சாரசரி 42 கிலோ வாட் மின்சாரம் குறைவாக உபயோகிக்கின்றேன்.

16 பல்புகள் * 60 வாட் * 2 மணி நேரம் * 30 நாட்கள் = 57600 வாட்/ஒருமாதம்

16 பல்புகள் * 15 வாட் * 2 மணி நேரம் * 30 நாட்கள் = 14400 வாட்/ஒருமாதம்

1 கிலோ வாட் மின்சாரம் 1 ரூபாய் என்றாலும் மாதம் கிட்டதட்ட 42 ரூபாய் எனக்கு சேமிப்பு.

நீங்க எப்போ எரிபொருளையும் உங்களது பணத்தையும் சேமிக்க போறிங்க ?

மேலும் விரிவான செய்திக்கு இங்க போங்க, சுருள் பல்ப பத்தி தெறிந்து கொள்ள இங்க போங்க