கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி சிவகங்கை மாவட்டம் குமாரகுறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாய கூலியான திரு.சேதுராமன் மகன் சுசீந்திரன் மலோசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
இது சம்பந்தமாக உள்ளுர் காவல் நிலையதில் தனது மகனது கொலையை பற்றி வழ்க்கு பதிவு செய்ய முயன்று இயலாத நிலையில் திரு.சேதுராமன் உயர் நீதிமன்ற தலமை நீதிபதிக்கு மனு ஒன்றை தாக்கல் செய்தார், அது இலவச சட்ட உதவி மையத்துக்கு வந்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்காக பதிவு செய்யப்பட்டது.
சேதுராஜவின் நிலையை நன்கு உணர்ந்த தலமை நீதிபதி ராமசுப்பிரமணியன் அவர்கள் மனுவை விசாரணைக்கு எடுத்து, கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் பாதுகாக்கப்படும் சுசீந்திரனின் உடலை மூன்று வாரங்களுக்குள் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு மலேசியாவில் உள்ள இந்திய துதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலைக்கு காரணமானவர்களின் மீது பரமகுடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும், இந்திய அரசு பதிக்கப்பட்ட திரு.சேதுராமனுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் ஆர்டிக்கிள் 226-ன்படி 'இந்திய மக்களுக்கு எதிராக எங்கெல்லாம் அநீதி நடக்கிற்தோ. அங்கே அவர்களின் நலனைப் பாதுகாக்க வழி செய்யப்பட்டுள்ளது'. இப்படி முன்மாதிரியான உத்தரவை பிறப்பித்திருப்பதின் மூலம் அதனை உறுதி செய்திருக்கின்றது மதுரை நீதிமன்றம்.
நன்றி:- விகடன்.