Saturday, August 25, 2007

மெல்லத் தமிழ் இனி வளரும்

தமிழ் நாட்டில்லுள்ள மாநில அரசு மற்றும் உள்ளாட்சித் துறையின் மேற்பார்வையில் நடைபொரும் அனைத்து பள்ளிக்கூடகங்களிலும், மெட்ரிகுலேசஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளிலும் தமிழ் ஒரு பாடமாக கட்டாயம் கற்றுத் தரப்பட வேண்டும் என்று தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை, இப்போது உயர் நீதிமன்றமும் செல்லும் என்று அங்கீகரித்திருப்பது தமிழ் உணர்வும் தமிழ்மொழி மீது பற்றும் கொண்ட அனைவரும் வரவேற்கவேண்டிய தீர்ப்பு.


தற்போதைய தி.மு.க அரசு செய்திருக்கும் ஒருசில வரவேற்கதக்க நடவடிக்கைகளில் ஓன்றுதான் தமிழ் கட்டாயப் பாடமாக வேண்டும் என்கிற இந்த சட்டம். உயர் நீதிமன்றமும் இந்தச் சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்திருப்பதன் மூலம், தமிழகம் மீண்டும் மூன்று மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதில் இருந்த தடையை நீக்கியிருக்கிறது.

தமிழ் தெரியாமல் தமிழகத்தில் கல்வி கற்க முடியும் என்கிற நிலமை இனி தொடராது! மெல்லத் தமிழ் இனி வளரும்.

நன்றி திணமணி