Wednesday, January 30, 2008

ஒரு கோடி தொழில்முணைவர்கள்

இன்று முன்பகல் (Jan 30, 2008 11:00AM to 12:00 PM) WNPR பண்பலைவரிசையில் (FM Radio) "On Point" எனும் நிகழ்சி கேட்க வாய்ப்புகிடைத்தது. இதில் தருண் கண்ணன் எழுதிய "Billions of Entrepreneurs: How China and India Are Reshaping " புத்தகத்தின் மீதான கலந்துரையாடல் மற்றும் ஆசிரியருடனான நேர்காணல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் இந்தியவை பற்றி நாம் ஆனைவரும் அறிந்த விசயங்களை சற்றே மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கின்றார் புத்தகத்தின் ஆசிரியர், உதரணங்களுக்கு சில

  1. இந்தியா சீனாவின் உற்பத்திதுறை இயந்தியர்களின் புதிய, புதிய வடிமைப்புகளையே உற்பத்திசெய்கின்றன.
  2. இந்தியாவின் வலிமை அதனது மதிநுட்பமே, சீனாவின் வலிமை அதனது உற்பத்திறனும் தொழிலாள்களுமே.
  3. இந்தியா சீனாவிடம் இருந்து கற்றுகொள்வதை காட்டிலும் சீனா இந்தியாவிடம் இருந்து அதிகம் கற்க வேண்டியுள்ளது (!!!!)
  4. இந்தியாவின் அரசாங்கம் சீனாவின் அரசாங்கத்தை காட்டிலும் தொழிழ் மற்றும் மக்கள் நலன் விரும்பும் அரசு.

மேலும் Mahaindara & Mahaindar- வின் தாயாரிப்புகளான சிறிய வகை விவசாய கருவிகள் அமெரிக்க சந்தையில் அதிகம் புளங்குவது மற்றும், இந்தியாவின் முன்னேற்றதின் பல காரணிகள் அலசப்பட்டது.

மேலும் தகவலுக்கு இங்கே சொடுக்குங்கள். இது MP3 வடிவில் தரவிரக்கம் செய்யும் கொண்டுள்ளது.

Thursday, January 10, 2008

டாடாவின்- நானோ

டாடா நிறுவனத்தின் குறைந்தவிலை மகிழ்வுந்தான "நானோ" நேற்று (Jan 10, 2008 ) டெல்லியில் நடந்த மோட்டார் வாகனத்திற்கான கண்காட்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இது பலரது எதிர்பார்புகளை கொண்டிருக்க முக்கியகாரணம் அதன் விலையாது 1,00,000 ரூ என்பதே. இந்த வாகனம் இந்திய நடுத்தர வர்கத்துக்கான வரப்பிரசாதம் என்றே சொல்லாம்.




இதன் வாகனத்தின் வரவால் இந்தியாவில் நடக்கும் ஒரு சில மாற்றங்களை காண்போம்.

1. இனி இரண்டு சக்கர வாகனத்தில் மொத்த (4 நபர்) குடும்பத்தையும் ஏற்றிக் கொண்டு போகும் பயணத்தை தவிர்கலாம். இது இரட்டை சக்கர வண்டியில் அதிகநபர்களை ஏற்றி செல்வதைக் காட்டிலும் பாதுகாப்பானதே.
2. நான்கு சக்கர வாகனத்தினர் பொரும்பான்மையானவர்கள் வாகன காப்பீடுவைத்திருப்பது வாடிக்கை. டாடாவின் நானோ இந்திய வாகன காப்பீட்டு துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும்.
3. இவ்வாகனத்தின் மூலம் இந்திய சாலைகளில் லேன் (Lane System) முறையை செயல் படுத்த பெரிய அளவிலான வாப்புக்கள் உள்ளன.

மேலே சொன்ன அனைத்துமே டாடாவின் நானோ இரண்டுசக்கர வாகனத்திற்கான ஒரு மாற்று வாகனமாக அமையும் என்ற கணிப்பிலே.

இப்பதிவை எழுததூண்டிய காரணிகள் இவைகள் அல்ல. டாடாவின் நானோ மேற்கத்திய நாட்டு மோட்டார் வாகன தயாரிப்பாளர்களின் வயிற்றில் கரைத்த புளியே!


அப்படி என்னதான் இந்த நானோவால் செய்ய இயலும்


1. இந்திய சாலைகளை டாடாவின் நானோ நிறப்பும். இதனால் இந்தியாவின் எரிபொருள் தேவையை அதிகரிக்கும். அதன் பொருட்டு ஏற்படும் எரிபொருளின் தட்டுப்பாடும், விலையேற்றமும் மேற்கத்திய நாடுகளை நேரடியாக பாதிக்கும். இதனால் மேற்கத்திய நாடுகளின் மோட்டார் வாகன விற்ப்பனை மேலும் சரிவடையலாம். மேற்கத்திய தயாரிப்பு மோட்டார் வாகனங்களை முழுதாக தவிர்த்து ஜப்பானிய தயாரிப்புகளை மேலும் அதிகமாக வாங்கலாம் ஏன் நம்து டாடாவின் தயாரிப்புகளை கூட வாங்கலாம்.


2. வளரும் நாடுகளின் மோட்டார் சந்தையின் பெரும் பகுதியை இவ்வாகனம் கைபற்றும்.


3. நானோவின் எரிபொருள் சிக்கன பயன்பாட்டு திறன், அதாவது 1லிட்டர் பெட்ரோலில் 20 முதல் 26 KM செல்லும் திறன். இதை அமெரிக்க அளவுகளில் சொன்னால் 1 கேலனுக்கு (3.73 லிட்டரில்) 50 (80 KM) மைல் கடக்க இயலும். நானோவின் இந்த எரிபொருள் பயன்பாட்டு திறனும் அதன் விலையாகிய $2,600-ம் மேற்கத்திய மோட்டார் வாகன உற்பதியாளருக்கு ஒரு அழுத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகது.



நானோவில் மற்ற மோட்டார்வாகனத்தை காட்டிலும் பாதுகாப்பு அம்சங்கள் மிகக்குறைவாக இருப்பினும் இரண்டு சக்கர வாகனத்தை காட்டிலும் பாதுகாப்பானது. இவ்வாகனம் மோட்டார் சந்தையில் ஒரு வலம் வரும் என்பதை மறுக்கமுடியாது.


இந்திய மோட்டார் தயாரிப்புகளை உலகம் உற்று நோக்க வைத்தமைக்கு ஒரு சபாஷ் டாடா!!