Wednesday, January 30, 2008

ஒரு கோடி தொழில்முணைவர்கள்

இன்று முன்பகல் (Jan 30, 2008 11:00AM to 12:00 PM) WNPR பண்பலைவரிசையில் (FM Radio) "On Point" எனும் நிகழ்சி கேட்க வாய்ப்புகிடைத்தது. இதில் தருண் கண்ணன் எழுதிய "Billions of Entrepreneurs: How China and India Are Reshaping " புத்தகத்தின் மீதான கலந்துரையாடல் மற்றும் ஆசிரியருடனான நேர்காணல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் இந்தியவை பற்றி நாம் ஆனைவரும் அறிந்த விசயங்களை சற்றே மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கின்றார் புத்தகத்தின் ஆசிரியர், உதரணங்களுக்கு சில

  1. இந்தியா சீனாவின் உற்பத்திதுறை இயந்தியர்களின் புதிய, புதிய வடிமைப்புகளையே உற்பத்திசெய்கின்றன.
  2. இந்தியாவின் வலிமை அதனது மதிநுட்பமே, சீனாவின் வலிமை அதனது உற்பத்திறனும் தொழிலாள்களுமே.
  3. இந்தியா சீனாவிடம் இருந்து கற்றுகொள்வதை காட்டிலும் சீனா இந்தியாவிடம் இருந்து அதிகம் கற்க வேண்டியுள்ளது (!!!!)
  4. இந்தியாவின் அரசாங்கம் சீனாவின் அரசாங்கத்தை காட்டிலும் தொழிழ் மற்றும் மக்கள் நலன் விரும்பும் அரசு.

மேலும் Mahaindara & Mahaindar- வின் தாயாரிப்புகளான சிறிய வகை விவசாய கருவிகள் அமெரிக்க சந்தையில் அதிகம் புளங்குவது மற்றும், இந்தியாவின் முன்னேற்றதின் பல காரணிகள் அலசப்பட்டது.

மேலும் தகவலுக்கு இங்கே சொடுக்குங்கள். இது MP3 வடிவில் தரவிரக்கம் செய்யும் கொண்டுள்ளது.

No comments: